» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் தர மறுத்தவர்களுக்கு அரிவாள் வெட்டு :தந்தை மகன் கைது

திங்கள் 26, ஜூலை 2021 9:27:42 PM (IST)

சிவகிரி அருகே பெண் தர மறுத்தவர்களை அரிவாளால் வெட்டிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டிணம் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் அருணாசலம் (62). இவரது மகள் வழி பேத்தி விருதுநகர் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். சிவகிரி அருகே உள்ள சங்குபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் செல்வ மணி (21). இவருக்கு  அந்த மாணவி முறைப்பெண் ஆவார்.

இந்நிலையில் இன்று மாலை செல்வமணி   குடும்பத்தினர், பெண் கேட்பதற்காக  சங்குபுரத்திலிருந்து, தேவிபட்டிணம் வந்துள்ளனர். அருணாசலம் குடும்பத்தினருக்கு செல்வமணிக்கு பெண் கொடுக்க விருப்பம் இல்லாததால், இரு குடும்பத்தினருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியுள்ளது. செல்வமணியும் அவரது தந்தை வெள்ளத்துரையும்  அருவாளால் அருணாசலம்,  அவரது மகன் முருகன் ஆகியோரை வெட்டியுள்ளனர். 

மேலம்  விஜயதுரைச்சியின் தம்பி கனகராஜ்க்கு  அடி விழுந்துள்ளது. இம் மோதலில் காயமடைந்த 3 பேரும்  சிவகிரி அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் வழக்குப்பதிவு செய்து செல்வமணி,  வெள்ளத்துரை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory