» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!
புதன் 27, ஜனவரி 2021 4:43:28 PM (IST)

நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, இன்று விடுதலையான சசிகலாவை வரவேற்று திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியிருந்தார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
"கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் நடந்துகொண்டதாலும் சுப்ரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என்றும் அதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் இருவர் பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்
புதன் 3, மார்ச் 2021 8:39:26 AM (IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவன் சித்ரவதை : வாலிபருக்கு வலைவீச்சு
புதன் 3, மார்ச் 2021 8:35:03 AM (IST)

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்
செவ்வாய் 2, மார்ச் 2021 4:37:30 PM (IST)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதி : ஒப்பந்தம் கையெழுத்தானது
செவ்வாய் 2, மார்ச் 2021 4:28:01 PM (IST)

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை ஆய்வு
செவ்வாய் 2, மார்ச் 2021 4:12:23 PM (IST)

தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
செவ்வாய் 2, மார்ச் 2021 3:56:38 PM (IST)
