» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகைக்கடை அதிபர் மனைவி, மகனைக் கொன்று 16 கிலோ தங்கம் கொள்ளை : சீர்காழியில் பயங்கரம்
புதன் 27, ஜனவரி 2021 12:21:33 PM (IST)
சீர்காழியில் நகைக்கடை அதிபர் மனைவி, மகனைக் கொன்று 16 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார் . மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
காலை 6:30 மணியளிவில் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர. அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார் அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் சிடி ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டு வாசலில் இருந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா இன்ஸ்பெக்டர் மணிமாறன், சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்கள் இந்தியில் பேசியதால் வடமாநிலத்தில் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காரில் தப்பிச் சென்ற கொள்ளை கும்பல் சீர்காழி புறவழிச்சாலையில் மேலமாத்தூர் செல்லும் பகுதியில் அந்த காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டிய போலீஸார், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த வட இந்திய கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகள் அனைத்தும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் இருவர் பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்
புதன் 3, மார்ச் 2021 8:39:26 AM (IST)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுவன் சித்ரவதை : வாலிபருக்கு வலைவீச்சு
புதன் 3, மார்ச் 2021 8:35:03 AM (IST)

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்
செவ்வாய் 2, மார்ச் 2021 4:37:30 PM (IST)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதி : ஒப்பந்தம் கையெழுத்தானது
செவ்வாய் 2, மார்ச் 2021 4:28:01 PM (IST)

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம் தொடக்கம்: ஆளுநர் தமிழிசை ஆய்வு
செவ்வாய் 2, மார்ச் 2021 4:12:23 PM (IST)

தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
செவ்வாய் 2, மார்ச் 2021 3:56:38 PM (IST)
