» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு

வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 4:45:39 PM (IST)



இந்திய கடலோர காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் வீராவில் கடலோர காவல் படையினர் கமாண்டன்ட் வர்கீஸ் தலைமையில் மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று பகல் 12 மணியளவில் அப்போது தூத்துக்குடியில் இருந்து வட கிழக்கில், கீழக்கரையில் இருந்து 8 கடல் மைல் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 விசைப்படகுகள் நிற்பதை அதிகாரிகள் கண்டனர்.

அவர்கள் அதனருகில் சென்றபோது அவை இலங்கையை சேர்ந்த படகுகள் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் அந்த விசைப்படகுகளில் இருந்த 15 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கை நீர்கொழும்பைச் சார்ந்த சிங்கள மீனவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த 3 விசைப்படகுகளையும் படகிலிருந்த 180 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களை தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காற்றில் திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்ததாக சிங்கள மீனவர்கள் தெரிவித்தனர்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads