» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு

புதன் 28, ஜூலை 2010 9:20:26 AM (IST)

தனியார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்தி, மனுவை தீயிட்டு எரித்தது தொடர்பாக, 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
தூத்துக்குடியிலுள்ள தனியாருக்கு சொந்தமான "ஸ்டெர்லைட்' தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுமக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள அந்த ஆலையை உடனடியாக மூடவேண்டுமென வலியுறுத்தி, ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர், ம.தி.மு.க., மாவட்ட செயலர் ஜோயல் தலைமையில் நேற்று முன்தினம் மதியம், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயில் கதவை மூடி போராட்டம் நடத்தினர். கலெக்டர் கோ.பிரகாஷிடம் தர வைத்திருந்த மனுக்களை தீயிட்டு எரித்தனர்.  இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவன், சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஜோயல், நாம் தமிழ் கட்சி மாவட்ட செயலர் பிரபு, வக்கீல்கள் அதிசயகுமார், ராமச்சந்திரன், பாத்திமாபாபு மற்றும் 50 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டமாக கூடி வழிமறித்தல்(147,342), மனுவை தீயிட்டு எரித்தல்(285), அரசு அலுவலக கதவுகளை மூடிபணி செய்யவிடாமல் தடுத்தல்(353), கொலை மிரட்டல் விடுத்தல் (506(1)) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)

ஸ்ரீவெங்கடேசபுரத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:57:21 PM (IST)

Sponsored Ads