» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

Share

ஸ்டெர்லைட் பவர் பிளாண்ட் முன்பு மறியல் போராட்டம்: கிராம மக்கள் முடிவு!

வேல்குமார் | ஞாயிறு 25, ஜூலை 2010 11:48:15 AM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகம் எண்: 1 அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை இன்னும் கொடுக்காமல் இழுத்தடிப்பதைக் கண்டித்தும், சிப்காட் வளாகம் எண்:2 அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வழங்கிட வேண்டும்.

சிப்காட் வளாகத்திலுள்ள கனரக தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் இத்தொழிற்சாலைகளால் தெற்கு வீரபாண்டியபுரதட மற்றும் அதைச் சார்ந்த அ குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறி வருகிறது.

இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியும் இதுவரை அந்த கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்தும் நாளை 26ம் தேதி திங்கள்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பவர் பிளாண்ட் முன்பு கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு கிராம மக்கள் நலச்சங்க செயலாளர் ஆர். தங்கராஜன் தலைமை தாங்குகிறார். தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், அ.குமாரரெட்டியார் புரம், காயலூரணி, சாமிநத்தம், ராஜாவின்கோவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!

வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)

ஸ்ரீவெங்கடேசபுரத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:57:21 PM (IST)

Sponsored Ads