» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா: மின்னிதழ் - 3 புதிய நூல்கள் வெளியீடு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 5:16:28 PM (IST)



தூத்துக்குடி ரோச் மண்டபத்தில் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, 'நெய்தல்' மின்னிதழ் வெளியீடு மற்றும் 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் தலைமை தாங்கினார். புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. ஆசியுரை வழங்கினார். புன்னைக்காயல் ஊர்க் கமிட்டி தலைவர் கிறிஸ்டன், துறைமுகக் கமிட்டி தலைவர் தாமஸ், மனோன் அக்வா உரிமையாளர் டெனிஸ்டன் மற்றும் ஜானி மோத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொற்கை டி.வி. இயக்குநர் மைக்கேள் பயஸ் கோஸ்தா புதிய மின்னிதழை அறிமுகம் செய்து உரையாற்றினார். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அரிசியைச் சங்கத்தின் செயலாளர் ஆண்டனி அம்புரோஸ் கரிகாலன் வழங்கினார். மாணவர்களுக்கான சீருடைகளை எழுத்தாளர் வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸ் வழங்கினார். மேலும், நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உயர்கல்வி பயிலும் 10 மாணவர்களுக்குத் தலா ₹5,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

ஜோமெல் எழுதிய சிட்டுக்குருவி கவிதை நூலைத் தொழிலதிபர் லினோ வெளியிட மணவை வினோஜின் பெற்றுக் கொண்டார். இந்நூலைப் பேராசிரியர் முனைவர் ஜாக்சன் அறிமுகம் செய்தார். ஆசிரியர் நிலன் கனகராஜ் எழுதிய அழகிற்குக் காப்புரிமை கவிதை நூலை தொழிலதிபர் மெரிண்டோ வில்லவராயர் வெளியிட, ராஜா போஸ் ரீகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள ஆசிரியை லூடா நூலை அறிமுகம் செய்து பேசினார்.

ஆசிரியரும் எழுத்தாளருமான தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ எழுதிய நெய்தல் அண்டோவின் உரைகள் எனும் நூலை அவரது மாணவரும் எலும்புமுறிவு  மருத்துவருமான பிரபு அலாய் வெளியிட, மற்றொரு மாணவரும் விரிவுரையாளருமான அண்டோ ஜோபர்ட் பெற்றுக் கொண்டார். இந்நூலை ஆசிரியரின் இந்நாள் மாணவர் சூர்யா சிறப்பான முறையில் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் புன்னைக்காயல் ஊர் நிர்வாகிகள், பரதவ அரசியல் எழுச்சிப் போராளிகள் அமைப்பைச் சேர்ந்த பெஸ்டி, கனிட், ரகேஷ், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாண்டோ, இரத்த தான ஜெயபால், தியாகி பெஞ்சமின் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த பிரேசில், தமிழக நெய்தல் தொழில் முனைவோர் சங்கத்தின் பிரின்ஸ் உள்ளிட்ட பல அமைப்பினரும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிஷாந்த் வரவேற்புரையாற்றினார். அன்னை பரதர் நலச்சங்கப் பொருளாளர் காஸ்ட்ரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியர் நெய்தல் அண்டோ நன்றியுரை கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory