» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேன் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி, 3 பேர் படுகாயம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:57:42 AM (IST)
ஆறுமுகநேரி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இளங்காத்தா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் லட்சுமணன் (40), ரங்கன் மகன் சுதாகர் (48) மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) ஆகிய 3 பேரும் காரில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை லட்சுமணன் ஓட்டியுள்ளார்.
ஆறுமுகநேரி சோதனைச் சாவடி அருகே கார் சென்றபோது, குரும்பூரில் இருந்து காயல்பட்டினம் நோக்கி எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் இருந்த லட்சுமணன், சுதாகர் மற்றும் வேன் ஓட்டுநரான குரும்பூர் தண்ணீர் பந்தலைச் சேர்ந்த முருகன் மகன் மகேஷ் (35) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக வேனில் இருந்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் மகேஷ் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)









ஶ்ரீAug 8, 2026 - 01:54:15 PM | Posted IP 104.2*****