» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா? - பொதுமக்கள் கொந்தளிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:49:40 AM (IST)
தூத்துக்குடியில் வரி செலுத்தாத ஏழை எளிய மக்களின் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் லட்சக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ள ஏழை எளிய மக்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் போக்கிற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனுமதியின்றி இயங்கும் திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் பல லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. குறிப்பாகப் பிரபலத் தனியார் பள்ளி ஒன்று ₹23 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளது.
₹23 லட்சம் பாக்கி வைத்துள்ள பள்ளி மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ₹5,000 பாக்கி வைத்திருந்த ஏழைத் தொழிலாளியின் வீட்டுக் குடிநீர் இணைப்பை உடனடியாகத் துண்டித்துள்ளனர். ஆனால், அதே பகுதியில் ₹38,000 பாக்கி வைத்திருந்த வசதிபடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
பணபலம் உள்ள பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் "ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு" எனப் பாகுபாடு காட்டும் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாகக் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களிடம் வரிகளை வசூலிக்க வேண்டும் என்றும், விதிமீறிய கட்டிடங்களுக்குச் சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








