» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேம்பாலத்தில் சாய்ந்த சோலார் மின் கம்பம்: போக்குவரத்து சீர்செய்த பக்தருக்குப் பாராட்டு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 11:23:29 AM (IST)

தூத்துக்குடியில், சூறாவளி காற்று காரணமாக மேம்பாலத்தில் உயர் சோலார் மின் கோபுர விளக்கு கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. அவ்வழியாக வந்த செவ்வாடைத் தொண்டர் ஒருவர், சாய்ந்து கிடந்த கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் சோலார் மின்விளக்குக் கோபுரக் கம்பம், திடீரென வீசிய சூறாவளி காற்றினால் முறிந்து கீழே சாய்ந்தது.மின் கோபுர விளக்கு கம்பம் அற்று கீழே விழுந்தபோது, நல்வாய்ப்பாக அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழாமல் தனியாக விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், மின் கம்பம் நடுரோட்டில் விழுந்து கிடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது. அந்தச் சமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த 'செவ்வாடைத் தொண்டர்' சக்தி என். பாண்டி என்பவர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டார்.
சாய்ந்து கிடந்த சோலார் மின் கோபுர விளக்கைச் சிரமப்பட்டுத் தூக்கி, மேம்பாலத்தின் ஓரத்திற்கு எடுத்து வைத்தார். இதனால் தடைபட்டுக் கிடந்த போக்குவரத்து உடனடியாகச் சீரடைந்து வாகனங்கள் தடங்கலின்றிச் செல்லத் தொடங்கின.

ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்த சக்தி என். பாண்டியின் இந்தச் சேவையைப் பாராட்டி, அப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
P KamarajAug 3, 2026 - 08:11:50 PM | Posted IP 172.7*****
ஆபத்தை உணராமல் துரிதமாக செயல்பட்டு உதவி செய்த அந்த நண்பருக்கு என் நன்றி வாழ்த்துக்கள்
MANITHANAug 3, 2026 - 12:30:39 PM | Posted IP 172.7*****
SUPER BRO
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)









சங்கரன்Aug 4, 2026 - 07:26:01 AM | Posted IP 172.7*****