» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடைவிழா நாளை தொடக்கம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 10:45:08 AM (IST)
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக் கொடைவிழா நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் ஆடிக் கொடைவிழா, நாளை இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குவதைத் தொடர்ந்து இரவில் வில்லிசை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 7 மணிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணி மற்றும் இரவு 11 மணிக்குக் கும்பம் திருவீதி உலா நடைபெறும். மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
ஆகஸ்ட் 5 (புதன்கிழமை): காலை 8 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு அன்னதானம், பகல் 11:30 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்குச் சிறப்பு மகுடாட்டம் ஆகியவை நடைபெறும்.மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8:30 மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
விழாவையொட்டி நாளை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)









மக்கள்Aug 3, 2026 - 10:41:24 PM | Posted IP 104.2*****