» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குப் பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், நெல்லை மாவட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து காலியாக இருந்த பணியிடத்திற்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்குச் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








