» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)
உடன்குடி அருகே வியாபாரியை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற இரு நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கொட்டங்காடு இடைச்சி விளையைச் சேர்ந்த வசீகரன் (63), உடன்குடி விலுக்குடியிருப்பு விலக்கில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நிலம் சம்பந்தமாகப் பேசுவதற்காகச் செட்டியாபத்திற்குத் தேரியூர் தென்றல் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது, தாண்டவன்காடு கிராமத்தில் தங்கிப் பந்தல் வேலை செய்யும் ஆழ்வார்தோப்பைச் சேர்ந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் (20) என்பவர் வசீகரனை வழிமறித்துள்ளார். பழக்கடைப் பழக்கத்தின் அடிப்படையில் வசீகரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அருகில் உள்ள முள் காட்டுப் பகுதியிலிருந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும், முத்துகிருஷ்ணனும் இணைந்து வசீகரனைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
அவரிடமிருந்த அரை பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள், சட்டைப் பையில் இருந்த ரூ.5,500 ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்றபோது வசீகரன் கீழே விழுந்து காயமடைந்தார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து வசீகரன் அளித்த புகாரின் பேரில், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








