» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மொட்டை மாடியைச் சுத்தம் செய்தபோது தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு!
புதன் 8, ஜூலை 2026 11:08:24 AM (IST)
திருச்செந்தூரில் வீட்டின் மொட்டை மாடியைத் தூய்மைப் படுத்தியபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத பகுதியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (64). இவருக்குத் திருமணமாகாததால், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராமநாதன் தனது வீட்டின் மொட்டை மாடியில் தேங்கியிருந்த குப்பைகளைத் துப்புரவு செய்வதற்காக மேலே சென்றுள்ளார்.
மாடியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத ஒரு பகுதியில் ஏறி குப்பைகளை அப்புறப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ராமநாதன், மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








