» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மொட்டை மாடியைச் சுத்தம் செய்தபோது தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு!

புதன் 8, ஜூலை 2026 11:08:24 AM (IST)

திருச்செந்தூரில் வீட்டின் மொட்டை மாடியைத் தூய்மைப் படுத்தியபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத பகுதியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (64). இவருக்குத் திருமணமாகாததால், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராமநாதன் தனது வீட்டின் மொட்டை மாடியில் தேங்கியிருந்த குப்பைகளைத் துப்புரவு செய்வதற்காக மேலே சென்றுள்ளார். 

மாடியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத ஒரு பகுதியில் ஏறி குப்பைகளை அப்புறப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ராமநாதன், மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory