» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : கட்டிடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது!
புதன் 8, ஜூலை 2026 8:25:46 AM (IST)
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கட்டிடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகர் வண்ணார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குருசாமி (38). கட்டிடத் தொழிலாளியான குருசாமி, தாளமுத்துநகர் பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
போக்ஸோ சட்டத்தில் கைது:
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் அத்துமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குருசாமியைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிரடியாகக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








