» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : கட்டிடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது!

புதன் 8, ஜூலை 2026 8:25:46 AM (IST)

தூத்துக்குடியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கட்டிடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் வண்ணார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குருசாமி (38). கட்டிடத் தொழிலாளியான குருசாமி, தாளமுத்துநகர் பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

போக்ஸோ சட்டத்தில் கைது:
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் அத்துமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குருசாமியைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிரடியாகக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory