» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி கரிசல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: 2 பேர் கைது!

புதன் 8, ஜூலை 2026 8:05:25 AM (IST)

கழுகுமலை அருகே முறையான அரசு அனுமதிச் சீட்டு இன்றிச் சட்ட விரோதமாகக் கரிசல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநர் உள்பட இருவரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திச் சோதனை செய்த போது, திருவேங்கடம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து தெற்கு கழுகுமலைக்கு எவ்வித அரசு அனுமதிச் சீட்டும் இன்றிச் சட்டவிரோதமாகக் கரிசல் மண் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோத மண் கடத்தல் குறித்துக் கழுகுமலை போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரணி காலனி தெருவைச் சேர்ந்த ராஜ் மகன், டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துக்குமார் (20), தென்காசி மாவட்டம் களப்பாலன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் பூல்பாண்டி (38) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கரிசல் மண்ணுடன் கூடிய டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory