» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் கணிதவியல் விழா

வெள்ளி 27, ஜனவரி 2012 4:49:35 PM (IST)


தூத்துக்குடி, தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் தேசிய கணித வருட துவக்க விழா கொண்டாடப்பட்டது.  இதில், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு கணித கண்காட்சியும், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை பாத்திமா தன்னாட்சி கல்லூரியில் கணிதவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியை ரோஸ்மேரி கணிதத்தின் சிறப்பு மற்றும் கணிதம் நமது வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்று விளக்கிக் கூறினார்.  விழாவில் கணிதவியல் பேராசிரியை புனித தாரணி வாழ்த்துரை வழங்கினார்.

கணித மாதிரிகள், கணித மேதைகளின் வரலாறு, கணிதத்தின் சிறப்புக் கூறுகள் பல கண்காட்சியில் விளக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை தலைவர் சகோதரி ஜெயராணி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory