» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: பஞ்சாயத்து துணைத் தலைவருக்கு போலீஸ் வலை

வெள்ளி 27, ஜனவரி 2012 3:54:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், மேலஅரசரடி, புளியமரத்தடியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகள் முருகலட்சுமி 23). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் முனியசாமி (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முனியசாமி புளியமரத்தடி பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். 

வாளசமுத்திரத்தில் உலர் பூ கம்பெனியில் முருகலட்சுமி வேலைபார்த்து வந்தபோது முனியசாமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில், திருமணம் செய்து கொள்வதாக கூறி முருகலட்சுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் 2மாத கர்ப்பினியாக உள்ளார். 

இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முருகலட்சுமி முனியசாமியிடம் வலியுறுத்தியபோது அவரும், அவரது தந்தை சுப்பையாவும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித் து  முருகலெட்சுமி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியையும், சுப்பையாவையும் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory