» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜீப் கவிழ்ந்து தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் படுகாயம்

வெள்ளி 27, ஜனவரி 2012 10:53:09 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் உட்பட 2பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸபெக்டர் ராஜாசுந்தர். இவர் இன்று அதிகாலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஜீப்பில் எட்டையபுரம் சென்றுகொண்டிருந்தார். ஜீப்பை டிரைவர் காமராஜ் ஓட்டிச் சென்றார். 

எப்போது வென்றான் அருகே மஞ்சநாயக்கன் பட்டியில் திடீரென ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory