» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளங்களில் காதல் ஸ்டேட்டஸ்: வாலிபர் திடீர் தற்கொலை - போலீசார் விசாரணை!

வியாழன் 4, ஜூன் 2026 11:20:17 AM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் திடீரெனத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முனியசாமி என்ற சுரேஷ் (36). திருமண ஆகாத இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சுரேஷ், கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் காதல் தோல்வி அல்லது காதல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பதிவுகளையும், ஸ்டேட்டஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் அவர் முத்தையாபுரம் பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள ஒரு வேப்ப மரத்தில், திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறுகள் உள்ளதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory