» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!

புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)



காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு தொல்காப்பியர் கழகத்தின் 34-ஆம் ஆண்டு விழா, கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. விருது வழங்கும் இவ்விழாவிற்குத் தொல்காப்பியர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் பார்த்திவபுரம் பாபு தலைமை வகித்தார். 

தலைமை ஆசிரியர் சுரேந்திரன் வரவேற்புரையற்றினார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பி. கே. சிந்துகுமார் விருதுகளை வழங்கினார். தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி பா. லாசர் விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருதும், வின்சென்ட்-க்கு 'தொல்காப்பியர்' விருதும், மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரித் தாளாளர் தோமஸ் ராஜ்-க்கு 'நற்கல்வி நாயகன்' விருதும், எழுத்தாளர் அரிகிருஷ்ணதாஸ்-க்கு 'நற்பணிச்செம்மல்' விருதும், த. ராதாகிருஷ்ணன்-க்கு 'கல்விச்செம்மல்' விருதும் வழங்கப்பட்டன. 

பேராசிரியர் தே. பிரேம் ஆனந்த் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளைக் காப்புக்காடு தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி லாசர் தலைமையில் கழகத்தினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory