» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!

திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

தூத்துக்குடியில் கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஜீசஸ் (18) என்பவர், தனது நண்பர்களான சரவணகுமார் (24), அரவிந்த் (18) மற்றும் அஸ்வின் (18) ஆகியோருடன் நேற்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். காரை தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த காளிதாஸ் (21) என்பவர் ஓட்டியுள்ளார்.

சாந்தி நகர் அருகே கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அதிவேகமாகச் சென்று சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 6:20 மணியளவில் ஜீசஸ் சிகிச்சை பலனின்றி பரிச்சயமானார். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநர் காளிதாஸ் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory