» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர்களைக் காக்க பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 3:53:55 PM (IST)
திருவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் கருகி வரும் வாழைப் பயிர்களைக் காப்பாற்ற, பாபநாசம் அணையிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள பேய்க்குளம், குலையன்கரிசல், பொட்டல்குளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால், அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் இதர பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும், கால்நடைகளுக்குக் குடிநீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதில் தலையிட்டு, கருகும் பயிர்களைப் பாதுகாக்கவும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பாபநாசம் அணையிலிருந்து வடகால் பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது - 77 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:46:20 PM (IST)

நெல்லை- திருச்செந்தூர் இடையே ரயில் சேவையில் மாற்றம் : தென்னக ரயில்வே அறிவிப்பு
செவ்வாய் 9, ஜூன் 2026 8:37:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

குற்றச் செயல்களில் தவெகவிற்குத் தொடர்பில்லை : தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அறிக்கை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:23:34 PM (IST)

ஆட்சி அதிகார மமதையில் பெண்களை மிரட்டுவதா? தவெக எம்எல்ஏவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:39:23 PM (IST)

கோடைகாலத்திலும் தடையின்றி நிறைவான குடிநீர் விநியோகம்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:48:12 PM (IST)









