» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர்களைக் காக்க பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 3:53:55 PM (IST)
திருவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் கருகி வரும் வாழைப் பயிர்களைக் காப்பாற்ற, பாபநாசம் அணையிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள பேய்க்குளம், குலையன்கரிசல், பொட்டல்குளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால், அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் இதர பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும், கால்நடைகளுக்குக் குடிநீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதில் தலையிட்டு, கருகும் பயிர்களைப் பாதுகாக்கவும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பாபநாசம் அணையிலிருந்து வடகால் பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)










