» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான நபர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு!

வியாழன் 7, மே 2026 11:44:14 AM (IST)

கோவில்பட்டியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 55வயது நபர் சுடுகாட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் ராஜேந்திரன் (55). ராஜேந்திரன் கடந்த மே 1-ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போனார். இது குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் வழக்கப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அத்தை கொண்டான் சுடுகாட்டுப் பகுதியில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு போலீஸார், ராஜேந்திரனின் உடலை மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory