» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபர் கைது!
வியாழன் 7, மே 2026 8:49:55 AM (IST)
கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமியிடம் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் சுரேஷ் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று ஜவுளிக்கடை அதிபர் சுரேஷைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு அரசு காஜி வாழ்த்து!
புதன் 13, மே 2026 12:42:45 PM (IST)

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)










