» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் படுகாயம்!

புதன் 6, மே 2026 8:44:26 AM (IST)



குலசேகரன்பட்டினம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த குருஸ் (41) என்பவர், தனது காரில் அதே ஊரைச் சேர்ந்த கலைஈஸ்வரி, அபிநயா உட்பட 6 பேரை ஏற்றிக்கொண்டு குலசை கோவிலுக்குச் சென்றுள்ளார். கார் கல்லாமொழி பழைய பாசி கம்பெனி அருகே சென்றபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கலைஈஸ்வரி மற்றும் அபிநயா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். காரில் இருந்த மற்ற நால்வர் காயமின்றி தப்பினர். காரின் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்ததுடன், மின்சாரக் கம்பிகள் சாலையின் குறுக்கே அறுந்து விழுந்தன. மின் கம்பிகள் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள், சாலையில் கிடந்த மின் கம்பிகளை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். இந்த விபத்து குறித்துக் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory