» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)
ஆழ்வார்திருநகரி அருகே கார் - பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குருகாட்டூர் மேலத் தெருவைச் சேர்ந்த கேந்திரன் மகன் சுனில் தர்ஷன் (29). இவர் ஆத்தூர் அருகே புன்னக்காயலில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மாதத்தில் குழந்தை உள்ளது. குழந்தையுடன் மனைவி நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று இரவில் சுனில் தர்ஷன் மனைவியை பார்ப்பதற்காக கல்லிடைக்குறிச்சிக்கு காரில் புறப்பட்டு சென்றார். முத்துகிருஷ்ணாபுரம் அருகே அவர் காரைத் திருப்ப முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து தென்திருப்பேரை நோக்கி வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுனில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த தென்திருப்பேரை புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் (52) என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










