» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் மீன்கள் செத்து ஒதுங்கியதால் பரபரப்பு
திங்கள் 2, மார்ச் 2026 8:39:14 AM (IST)
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அதிக அளவில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் தருவைகுளம் ஆகும். இப்பகுதிக்கும் வெள்ளப்பட்டிக்கும் இடையே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக வந்து தருவைகுளம் அருகே கடலில் கலப்பது வழக்கம். இந்த ஓடையின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நேற்று, இந்த உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் திடீரென மீன்கள் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தன. இதில் சுமார் அரை கிலோ எடையுள்ள மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
உப்பாற்று ஓடை நீர் கடலில் கலக்கும் இடத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதால், அந்தத் தண்ணீரில் ஏதேனும் நச்சுக் கழிவுகள் கலந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)










ஓட்டு போட்ட முட்டாள்Mar 2, 2026 - 09:09:27 AM | Posted IP 162.1*****