» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

வியாழன் 5, பிப்ரவரி 2026 7:53:42 AM (IST)

ஆறுமுகனேரி பகுதியில் கஞ்சா விற்றதாக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் சிலர் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பேயன்விளை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஒருவர் மோட்டாா் சைக்கிளில் வைத்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பள்ளி மைதானம் அருகில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். 

விசாரணையில், அவர் காயல்பட்டினம் சுலைமான் நகரை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் மகன் அப்துல் சுக்குர் (25) என தெரிந்தது. அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், மோட்டார் ைசக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 12 வழக்குகளும் எட்டயபுரம், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சாகுபுறம் பஸ்நிறுத்தம் அருகில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அவர், காயல்பட்டினம் மாட்டுக்குளம் 3-வது தெருவை சேர்ந்த மாகின் அபூபக்கர் மகன் முகமது புகாரி(31) என்றும், தற்போது காயல்பட்டினம் மரைக்காயர் பள்ளி தெருவில் வசித்து வருவதாகவும், இந்த பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அந்த 2பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் 2பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory