» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
வியாழன் 5, பிப்ரவரி 2026 7:47:30 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களின் கீழ் 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற என் கனவு என் எதிர்காலம் என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் மி.பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










