» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் வருகிற 10ம் தேதி புதன்கிழமை பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் அமைக்க தெரிவிக்கப்பட்டதன் பேரில், தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு ஒன்றுக்கு ஐந்து பகுதி சபா குழுக்கள் வீதம் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கும் 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது வருகின்ற 10.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் மாண்புமிகு மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதிவாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:47:06 PM (IST)










