» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்

திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர்  ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேற்படி தேர்வு செய்யப்பட்ட 13  ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று (08.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.மேற்படி 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் நாளை (09.12.2025) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory