» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் காயமடைந்தார்.
சென்னை பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஆரிஸ் (29). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 3 நண்பர்கள் மூன்று பேருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்தனர். நண்பர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு உள்ளே சென்றனர்.
ஆரிஸ் மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கைப்பேசியில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் இருந்து காய்ந்த கிளை முறிந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










