» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது
புதன் 3, டிசம்பர் 2025 8:19:55 AM (IST)
தூத்துக்குடி அருகே ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் டிரைவரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பவானிநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் சதீஷ் (26). டிரைவர். இவரிடம் தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகரன் என்ற குணா என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதனை திருப்பி கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் புதுக்கோட்டை பவானிநகர் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் குணசேகரன் என்ற குணா உட்பட 6 பேர் சதீசை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றார்களாம். ஆனால் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது, அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், 6 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் என்ற குணா மற்றும், திரு.வி.க.நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுடலை (33), தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் மனோகரன் (24), திரு.வி.க.நகரை சேர்ந்த வாசுதேவன் மகன் பரத்விக்னேஷ் என்ற பரத் (29), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (25), அய்யனார் காலனியை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (23) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)

தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!
புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)










