» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்டவாளத்தில் இளம்பெண் சடலம்: போலீசார் விசாரணை!

புதன் 3, டிசம்பர் 2025 7:47:52 AM (IST)

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி- கடம்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு நேற்றுதகவல் கிடைத்தது. சடலத்தை போலீசார் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அவர், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த சிவசங்கரநாராயணன் மகள் ரம்யா (18) என்பதும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ படித்து வந்த மாணவி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory