» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரல் ஆற்றங்கரையில் ஸ்ரீ கணேசர் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்பணி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:45:44 PM (IST)

ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை 9 சிக்னல் கம்பெனி அதிகாரி கமாண்டிங் பங்கஜ் நாராயணன் அலோசனையின்பேரில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி., சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., அலுவலர் ராஜகுமார் வரவேற்றார். தலைமையாசிரியர் (பொறுப்பு) சுரேஷ் காமராஜ் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். 9 சிக்னல் கம்பெனி சுபேதார் ஜெகத் சிங், டி.ஹெச்.எம். சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர்.
இந்த பணியில் மாணவ, மாணவிகள் 85 பேர் கலந்து கொண்டு ஆற்றின் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பைகள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பைகளை சேகரித்து ஏரல் டவுண் பஞ்., குப்பை தொட்டியில் சேர்த்தனர். பணியில் ஈடுபட்ட மாணவர்களை ஸ்ரீ கணேசர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலாதேவி, ஏரல் வியாபாரி சங்க செயலாளர் விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை ஸ்ரீ கணேசர் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)










