» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:29:47 PM (IST)
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து (48), லாரி டிரைவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். காளிமுத்து வேலைக்கு சென்று விட்டு தினசரி மதுபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதனால் மன வேதனை அடைந்த காளிமுத்து நேற்று இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)










