» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளான 65 வயதிற்கு மேற்பட்ட வயதான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அவர்களது குடிமைப்பொருட்கள் டிச.2 மற்றும் 3ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தூத்துக்குடி அமுதா நகர் ரேஷன் கடை கடையில் பணிபுரியும் ஊழியர்கள் ரேஷன் பொருள்கள் வழங்கினர். இதுபோல் மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)










