» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் கடைகளால் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இடமாற்றம் செய்ய கோரிக்கை!
திங்கள் 1, டிசம்பர் 2025 3:10:28 PM (IST)
தூத்துக்குடியில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரண்டு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆர்.காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்கெட் ரோடு மற்றும் சிதம்பரநகர் மையவாடி பஸ் ஸ்டாப் அருகில் தமிழக அரசாங்கம் நடத்தும் மனுபான கடை செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
அந்த இரண்டு டாப்மாக் கடையால் பெண்களுக்கு உண்மையாக பாதுகாப்பு இல்லை, முதலில் மையவாடி டாஸ்மாக் கடையால் பல கொலைகள், வழிபறிகள், பல மனிதர்கள் சண்டை இன்னும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இரண்டாவது, பூ மார்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பூ வாங்க வரும் பெண்கள், காய்கறி வாங்க வரும் பெண்கள், டாஸ்மாக் கடையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதைப் பற்றி பல முறை தங்களிடம் புகார் கூறினேன்.
காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட்டமும் நடத்தினோம். இதுநாள் வரை எந்த பலனும் இல்லை. ஆனால் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பொய்யான தகவலை முன்வைத்து புகார் மனுவை நிராகரித்து விடுகிறார்கள். வரும்முன் காப்போம் என்ற பழமொழிப்படி, சில நாட்கள் முன்பு கயாத்தார் மதுபான கடையில் ஏற்பட்ட விபரீதம் எங்கும் நடந்து விட கூடாது என்பதற்காக, மேற்கூறிய இரண்டு மதுபான கடையையும் தாங்கள் நேரடி ஆய்வு செய்து, உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்மென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)











அதுDec 2, 2025 - 12:57:05 PM | Posted IP 104.2*****