» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 11:32:13 AM (IST)

தூத்துக்குடியில் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அன்னாள் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாலை அமைத்து தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தனியார் பகுதியில் சாலை போடுவது கடினம். அதை பொதுப் பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் சாலை அமைத்து தருவதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் சாலை அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை திரட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எட்டயபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மேயர் ஜெகன் பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு பள்ளிக்குச் செல்லும் சாலையை பொது பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் உடனடியாக சாலை அமைத்து தருவதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
RajaDec 1, 2025 - 10:35:54 PM | Posted IP 104.2*****
Thanks for NamTamizhar party
RajaDec 1, 2025 - 10:35:31 PM | Posted IP 104.2*****
Thanks for Nam Tamizhar
தமிழ்ச்செல்வன்Dec 1, 2025 - 07:14:09 PM | Posted IP 172.7*****
மாநகராட்சி சாலை அமைத்து தரவேண்டும் என்றால் அந்த சாலையை மாநகராட்சிக்கு எழுதிக்கொடுங்கள்... மேயரின் கோரிக்கை சரிதானே....
சாமானியன்Dec 1, 2025 - 12:30:01 PM | Posted IP 172.7*****
மக்கள் நலன் சார்ந்த பொது பிரச்சனைகளில் களமிறங்கி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியினரின் செயல் பாராட்டிற்குரியது
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)

காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி!
புதன் 22, ஜூலை 2026 8:17:10 PM (IST)

தவெகவில் இணைந்த சீனியர்களுக்கு மரியாதை இல்லையா? கடம்பூர் ராஜூ விளக்கம்
புதன் 22, ஜூலை 2026 5:19:04 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)









முட்டாள்Dec 2, 2025 - 01:00:35 PM | Posted IP 104.2*****