» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்
திங்கள் 17, நவம்பர் 2025 4:10:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்ற 31 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் குறை களையும் கூட்டத்தில், கலைபண்பாட்டுத் துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024 -2025ம் ஆண்டின் பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையத்தில் கிராமியப்பாடல், வில்லுப்பாட்டு, புலியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பயிற்சிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற 31 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களை 09 மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) வள்ளி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










