» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கட்டாயம் மிக கனமழை பெய்யும் என்று தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரி கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகக் கணிப்பு வெளியிட்டிருந்தோம்.
ஆனால், திங்கள்கிழமை மதியம் வரை தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடையவில்லை. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மிக மிக மெதுவாகவே நகருகிறது. இதனால் மழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
மழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் கட்டாயம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும், வரும் 24 மணி நேரத்திற்குள்ளாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கட்டாயம் மிக கனமழை பெய்யும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)











மார்ட்டின் மூக்குப்பிறிNov 18, 2025 - 03:46:20 PM | Posted IP 162.1*****