» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்
திங்கள் 17, நவம்பர் 2025 3:39:46 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நிஷாந் மனைவி பாஸ்டினா மெஜல்லா இவர் இன்று தன் இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், இரு குழந்தைகளுடன் முகாமில் வசிப்பதாகவும் தன்னுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தான் இருக்கும் பழைய வீட்டில் அடிக்கடி திருட்டு போவதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே தனக்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். சிப்காட் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










