» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்

திங்கள் 17, நவம்பர் 2025 3:39:46 PM (IST)



இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நிஷாந் மனைவி பாஸ்டினா மெஜல்லா இவர் இன்று தன் இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், இரு குழந்தைகளுடன் முகாமில் வசிப்பதாகவும் தன்னுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தான் இருக்கும் பழைய வீட்டில் அடிக்கடி திருட்டு போவதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே தனக்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். சிப்காட் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory