» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)
தூத்துக்குடியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்று நூதன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் பல ரோடுகள் போடப்பட்டன. ஆனால் அனைத்தும் தரம் இல்லாமல் போடப்பட்டு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக அமைக்காததால் அதன் அருகில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள், இக்குழிகளினால் விபத்துக்குள்ளாகிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் தரமில்லாத ரோட்டில் தான் நான்கு சக்கர வாகனத்தில் செல்வதால் அவர்களுக்கு பொது மக்கள்படும் அவதி தெரிவதில்லை.
ஆகையால், அனைத்து அரசு அதிகாரிகளும் இரு சக்கர வானத்தில் தான் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்திர விடவேண்டியும், இது மாதிரி மோசமான சாலையை முறையாக பராமரித்து பொது மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)











BabuNov 18, 2025 - 07:54:33 AM | Posted IP 162.1*****