» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)
தூத்துக்குடியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்று நூதன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் பல ரோடுகள் போடப்பட்டன. ஆனால் அனைத்தும் தரம் இல்லாமல் போடப்பட்டு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக அமைக்காததால் அதன் அருகில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள், இக்குழிகளினால் விபத்துக்குள்ளாகிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் தரமில்லாத ரோட்டில் தான் நான்கு சக்கர வாகனத்தில் செல்வதால் அவர்களுக்கு பொது மக்கள்படும் அவதி தெரிவதில்லை.
ஆகையால், அனைத்து அரசு அதிகாரிகளும் இரு சக்கர வானத்தில் தான் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்திர விடவேண்டியும், இது மாதிரி மோசமான சாலையை முறையாக பராமரித்து பொது மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நீட் தேர்வுக்கு எதிராக சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு - மாணவி உட்பட 16 பேர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:33:21 PM (IST)

கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)

காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்: தக்ஷிண மாற நாடார் சங்கம் நன்றி!
புதன் 22, ஜூலை 2026 8:17:10 PM (IST)

தவெகவில் இணைந்த சீனியர்களுக்கு மரியாதை இல்லையா? கடம்பூர் ராஜூ விளக்கம்
புதன் 22, ஜூலை 2026 5:19:04 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)









BabuNov 18, 2025 - 07:54:33 AM | Posted IP 162.1*****