» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)
தூத்துக்குடியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்று நூதன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் பல ரோடுகள் போடப்பட்டன. ஆனால் அனைத்தும் தரம் இல்லாமல் போடப்பட்டு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக அமைக்காததால் அதன் அருகில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள், இக்குழிகளினால் விபத்துக்குள்ளாகிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் தரமில்லாத ரோட்டில் தான் நான்கு சக்கர வாகனத்தில் செல்வதால் அவர்களுக்கு பொது மக்கள்படும் அவதி தெரிவதில்லை.
ஆகையால், அனைத்து அரசு அதிகாரிகளும் இரு சக்கர வானத்தில் தான் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்திர விடவேண்டியும், இது மாதிரி மோசமான சாலையை முறையாக பராமரித்து பொது மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)











BabuNov 18, 2025 - 07:54:33 AM | Posted IP 162.1*****