» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!
திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)

தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், தூத்துக்குடி தாலுகா மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி ராஜூவ்காந்தி நகர், கோமஸ்புரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் கட்டுமானம், உப்பளம், மீன்பிடி, தினக்கூலி தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களை வரும் 30ந் தேதிக்குள் மேற்படி வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
தற்போது மழைகாலம் என்பதால் வாடகை வீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. அதனால் பிளாக் 1 முதல் 17 பிளாக்கள் மொத்தமாக காலி செய்ய இயலாது. 2 பிளாக் வீதம் காலி செய்து மேற்படி வீடுகளை பழுதுபார்க்க வேண்டுகிறோம். இப்படி செய்தால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










