» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!
திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)

தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், தூத்துக்குடி தாலுகா மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி ராஜூவ்காந்தி நகர், கோமஸ்புரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் கட்டுமானம், உப்பளம், மீன்பிடி, தினக்கூலி தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களை வரும் 30ந் தேதிக்குள் மேற்படி வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
தற்போது மழைகாலம் என்பதால் வாடகை வீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. அதனால் பிளாக் 1 முதல் 17 பிளாக்கள் மொத்தமாக காலி செய்ய இயலாது. 2 பிளாக் வீதம் காலி செய்து மேற்படி வீடுகளை பழுதுபார்க்க வேண்டுகிறோம். இப்படி செய்தால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:57:23 PM (IST)

தெருக்களில் தவித்த ஆதரவற்றோர் மீட்பு: சிகிச்சை முடிந்து முதியோர் இல்லத்தில் அனுமதி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:52:36 PM (IST)

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)









