» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)

ஏரலில் அடகு கடை உரிமையாளர் நகைகளை மோசடி செய்துவிட்டதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடனை செலுத்திய பின்னர், நகைகளை மீட்க சென்ற போது நகைகளை கொடுக்க சிவா மறுத்துவிட்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)










