» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)



சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கணேசபுரம் வார்டு 15-ல் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களால் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது. 

அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளதாகவும், குலத் தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் குறி சொல்லும் தொழிலில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து, சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory