» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கணேசபுரம் வார்டு 15-ல் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களால் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது.
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளதாகவும், குலத் தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் குறி சொல்லும் தொழிலில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து, சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










