» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!

திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)



கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் முதல் நாள் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள மூக்கரை பிள்ளையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஏராளமான குழந்தைகளும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். 

கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி தாங்கி பக்தர்கள் செல்வது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லக்கூடிய பக்தர்களும் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory