» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது!

ஞாயிறு 16, நவம்பர் 2025 9:30:54 AM (IST)

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடியில் மடத்தூர் - சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்தில் அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெரு, ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன் @ மண்ணென்னை ஹரி (54), மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மடத்தூர், ஈபி காலனி 2வது தெரு வேல்சாமி ரவிக்குமார் (53), வண்ணார் 1 வது தெரு ஹரி கிருஷ்ணன் மகன் சந்திரசேகர் (28) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory