» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு: மேயர் தகவல்!
வெள்ளி 14, நவம்பர் 2025 10:40:01 AM (IST)

தூத்துக்குடி மாநகர் முழுவதும் 3000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் நடைபெற்ற துவக்கவிழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் ப்ரியங்கா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பிண்டோ வில்லவராயர் வரவேற்புரையாற்றினார்.
பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து பார்வையிட்ட பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் செயல்பாடுகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா பார்வையிட்டனர். பின்னர் மேயர் கூறுகையில் "மாநகராட்சி பகுதியில் 3000 கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும் மழைக்காலங்களில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதையும் கண்காணித்து அதன் அடிப்படையில் உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அது போல பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதை கண்காணித்து தடுக்க முடியும். ஆகையால் இனி வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும் மாநகராட்சியில் இருந்து மாநகரை கண்காணிக்க முடியும். மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களுக்கும் இணைப்பு மாநகராட்சி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
கால சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறோம் பொதுமக்களும் அதற்கேற்றாற்போல் தாங்களும் மாறி கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் நகர அமைப்பு திட்ட பொறியாளர் ராமலிங்கம், ரோட்டரி கிளப் சங்க செயலாளர் மகாலிங்கம், வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர் ஜேஸ்பர், மற்றும் அரசு அலுவலர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)











muthuNov 14, 2025 - 05:51:39 PM | Posted IP 104.2*****